வலுப்பெற்றது, வடகிழக்கு பருவமழை: சென்னை வானிலை மையம்.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் , தமிழகம், இலங்கை ஒட்டிய பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது இலங்கை, தமிழகத்தை ஒட்டி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும். தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







கருத்துகள் இல்லை