நான் பிரதமர் ஆவதற்காக மட்டுமே பிறக்கவில்லை: மோடி.
பானாஜி : நான் பிரதமர் ஆவதற்காக பிறக்கவில்லை. நான் எதையும் மறைக்கவும் இல்லை, நாட்டை இருளில் தள்ளவும் இல்லை என கோவா விழாவில் உணர்ச்சி பொங்க பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.கோவா விழாவில் ரூ.500, 1000 வாபஸ் பெறப்பட்டது குறித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், கறுப்பு பணத்திற்கு எதிராக போராடுவேன் என்ற எனது வாக்குறுதியை காத்து வருகிறேன். காங்., அரசு ஊழலுக்கு எதிராக போராடவில்லை. அதனால் தான் இப்போது நான் அதை செய்கிறேன். நான் எதையும் மறைக்கவும் இல்லை, நாட்டில் இருளில் தள்ளவும் இல்லை. கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கை இது. ஆனால் சிலர் இதை புரிந்து கொள்ளவில்லை. இந்திய பணம் ஏதாவது கொள்ளயைடிக்கப்பட்டிருந்தால் அதை இந்தியர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதே எங்களின் நோக்கம்.
அதனை கண்டறிவதும் எங்களின் கடமை. நவம்பர் 8 ம் தேதி நிறைய மக்கள் இந்தியாவில் அமைதியாக தூங்கினர். சில இடங்களில் சிலர் மட்டுமே இப்போது வரை உறக்கமின்றி அலைகின்றனர். கறுப்பு பணத்தால் நேர்மையான மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து காப்பதற்கே இந்த முக்கிய நடவடிக்கை.மக்கள் இந்த அரசை தேர்வு செய்துள்ளனர்.
அவர்கள் எங்களின் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஊழலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக 2014 ல் நிறைய மக்கள் ஓட்டளித்தனர். நிறைய எம்.பி.,க்கள் நகை வாங்குவதற்கு பான் எண் அவசியம் என்ற கட்டுப்பாட்டை நீக்குங்கள் என என்னிடம் கூறினர். இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம்.
பிரதமர் நாற்காலியில் அமருவதற்காக நான் பிறக்கவில்லை. எனது குடும்பம், வீடு என அனைத்தையம் நாட்டிற்கான துறந்தேன். பினாமி பெயர்களில் இருக்கும் சொத்துக்கள் மீத நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக மீகப் பெரிய நடவடிக்கை இது.
நீங்கள் கேட்கலாம் கறுப்பு பணத்திற்கு மீட்பு என்ன ஆயிற்று என்று. நான் செய்ய மாட்டேன் என எப்படி சொல்ல முடியும். போராட்டம் இப்போது தான் துவங்கி உள்ளது. இந்தியாவில் கறுப்பு பணம், ஊழலால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை.
ஏடிஎம்.,களில் வரிசையில் நிற்கும் மக்கள் மத்திய அரசிற்கு எதிரான நிலைப்பாட்டிற்காக நிற்கவில்லை. நாட்டை காக்க வேண்டும் என்பதற்காக, கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நிற்கிறார்கள். கறுப்பு பணம் பதுக்குபவர்கள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மக்கள் ஆதரிக்கிறார்கள்.
கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வரும் மிகப் பெரிய பணிக்காகவே ரகசியம் காக்கப்பட்டது. நேர்மையான மக்களுக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றோம். கறுப்பு பணத்தை ஒழிக்கும் போராட்டத்தில் என்னுடன் இணைய வாருங்கள். என பேசினார்.







கருத்துகள் இல்லை