சென்னையில் 5.9 கிலோ தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது.
சென்னை: சென்னையில் இரண்டு இடங்களில் நடந்த சோதனையில் 5.9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரகசிய தகவல்: வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி காரை, செங்கல்பட்டு அருகே அதிகாரிகள் நிறுத்திசோதனை நடத்தினர். காரில் இருந்த சபீர் அஹமத் மற்றும் உபயத்துல்லா ஆகியோர் தங்கம் கடத்தியதை ஒப்புக்கொண்டனர்.
தங்கம் பறிமுதல்: சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து வந்த பயணிகள் சிலர் தங்களிடம் தங்கத்தை வழங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். தங்கம் கடத்தியதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் வந்த காரை சோதனை நடத்தியதில், பல கட்டிங் பிளைடுகளில் தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
வீடுகளில் சோதனை: அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில், சென்னை சூளைமேட்டில் உள்ள ராஜா முகமது மற்றும் மன்சூர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் தங்க கட்டிகள் மற்றும் வெளிநாட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 5.9 கிலோ எனவும், இதன் மதிப்பு சுமார் ரூ. 1.40 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தங்கம் கடத்தியதாக, சென்னையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.







கருத்துகள் இல்லை