உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு பிடிவாரண்ட்-நீதிபதி கர்ணன் நடவடிக்கை.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட 7 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் ஊழல் முறைகேடு தடுப்பு மற்றும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட வேண்டி தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளதாக கூறியுள்ளார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ராஜன் கோகேய், மதன் பி லோகூர், பினாகி சந்திர கோஸ், குரியன் ஜோசப் ஆகியோரை வருகிற 8-ஆம் தேதி அன்று ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.








கருத்துகள் இல்லை